News December 28, 2025
அரியலூர்: கடுமையான நோயா? இங்கே செல்லுங்கள்!

அரியலூர் மாவட்டம் திருமழபாடி பகுதியில் புகழ்பெற்ற வைத்யநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடுமையான நோய் தோற்றால் பாதிக்கபட்டவர்கள் அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, புழுங்கல் அரிசியால் ரசம் சாதம் வைத்து மூலவரை அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் எந்த நோயாக இருந்தாலும் விரைவில் குணமடையும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 29, 2025
அரியலூர்: பாமகவை சேர்ந்தவர் கைது!

தா.பழூர் கடைவீதியில் கீழ சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த பிரசாத்குமார் (43) மற்றும் மகேந்திரன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் தா.பழூருக்கு சென்றுள்ளனர். அப்போது காரில் சென்ற பாமகவினர் ஓரமாக செல்ல சொன்னதால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரசாத்குமார், மகேந்திரனை பாமகவினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் இடங்கண்ணியைச் சேர்ந்த சதீஷ்குமார் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
News December 29, 2025
அரியலூர்: இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு!

அரியலூர் மாவட்டம் கூத்தூர் மற்றும் கீழப்பழூர் துணை மின் நிலையத்திலிருந்து நாளை (டிச.30) செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் பணி முடியும் வரை, அரியலூர் மேற்கு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!
News December 29, 2025
அரியலூர் மாவட்டம் காவலர்கள் ரோந்து பணி விவரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (டிச.28) இரவு 10 மணி முதல், இன்று(டிச.29) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில், ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


