News September 20, 2025
அரியலூர்: கடன் தொல்லையால் தற்கொலை

மீன்சுருட்டி அருகே அய்யப்பன் நாயகன்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ் (29). இவர் வேலைக்கு செல்லாமல் பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது . இந்நிலையில் கடன் தொல்லை அதிகரித்ததால் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளான சதீஷ், கடந்த செப்.17-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாப்பாக்குடி அருகே ஓர் தோட்டத்தில் சதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News September 20, 2025
அரியலூர்: திருமண தடையை தீர்க்கும் திருமழபாடி கோவில்

அரியலூர் மாவட்டம் , திருமழபாடி என்ற ஊரில் வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. நந்தி பகவானுக்கு இக்கோயிலில் தான் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இங்கு திருமணத்தடை இருப்பவர்கள், இங்கு சென்று நந்தி பகவானை மனமுருகி வழிபட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று நம்பப்படுகிறது. இதனை உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள் !
News September 20, 2025
அரியலூர் அருகே ரயில் மோதி பெண் பலி

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே வஞ்சினபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி சிந்தாமணி (48). நேற்றிரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர், அருகில் இருந்த தண்டவாளத்தில் ரயில் மோதி சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News September 20, 2025
அரியலூர் மாவட்டத்தில் இன்று பவர் கட் !

அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (செப்.20) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக அரியலூர், தேளூர், உடையார்பாளையம், இடையார், செந்துறை, பொய்யாதநல்லூர், வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், ஓ.கூத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.