News October 19, 2025
அரியலூர்: ஒப்பனை, பச்சை குத்தல் பயிற்சி – ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியிகளுக்கு ஒப்பனை, அழகுக்கலை, பச்சை குத்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்ட உள்ளது. இதற்கு 8 ஆம் வகுப்பு முடித்து 35 வயதிற்குக்குட்பட்டவர்கள், <
Similar News
News October 19, 2025
அரியலூரில் இப்படியான இடங்களா!

1.வேட்டக்குடி- கரையவெட்டி பறவைகள் சரணாலயம்: இச்சரணாலயம், புலம்பெயரும் நீர்ப்பறவைகளுக்கான, தமிழ்நாட்டிலுள்ள மிக முக்கியமான நன்னீர் ஏரிகளுள் ஒன்றாக விளங்குகிறது.
2. விக்கிரமங்கலம் புத்தர் சிலைகள்: சோழர் காலத்தில் விக்கிரமசோழபுரம், ஒரு புகழ்பெற்ற வர்த்தக மற்றும் வாணிப மையமாக இருந்தது. சோழர் காலத்திய அழகிய ஜெயின் மற்றும் புத்தர் சிற்பங்கள் இந்த கிராமத்தில் பாதுகாக்கப்படுகிறது. இதனை SHARE பண்ணுங்க.
News October 19, 2025
அரியலூர்: நெல் சேமிப்பு நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

அரியலூர் மாவட்டம் தேளுர் ஊராட்சியில் உள்ள நெல் சேமிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் நெல் இருப்பினை தொடர்ந்து பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் எனவும், நெல் மூட்டைகள் நிலையத்திற்கு வரும் போதும் மற்றும் அவை பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும்போதும் எடைகள் சரியாக உள்ளதா என்பதை உறுதிபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
News October 19, 2025
அரியலூர்: EPS-யை விமர்சித்த அமைச்சர் சிவசங்கர்

ஜெயங்கொண்டம் பஸ் நிலையதில் 5 பஸ்கள் புதிய வழித்தடத்தில் இயக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு அமைச்சர் சிவங்கர், அதனை தொடங்கி வைத்து பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எடப்பட்டி பழனிச்சாமி, திராவிடம் என்றால் அவர்தான் உதாணரம் என கூறுவது நகைப்புக்குரியது. அவருக்கு கொள்கை கிடையாது. அதிமுக பெயரை அமித்ஷா திமுக என மாற்றக்கூடிய சூழல்நிலைக்கு சென்று விட்டார் என கடுமையாக விமர்சித்தார்.