News January 21, 2025

அரியலூர் எஸ்பி பரிசுகள் வழங்கினார் 

image

அரியலூர் நகரில் உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 36 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப்போட்டி, பேச்சு போட்டி, நடன போட்டி, இசைப்போட்டி மற்றும் நாடக போட்டி உள்ளிட்டவைகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை இன்று மாவட்ட எஸ்பி தீபக் சிவாச் தனது அலுவலகத்திற்கு அழைத்து பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

Similar News

News March 6, 2026

அரியலூர் மக்களே இன்று இதை மறக்காதீங்க!

image

அரியலூர் மக்களே இன்று காலை 8:24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே இன்று மாலை 5:30 மணிக்குள் அருகிலுள்ள கோயிலிக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு சாப்பாடு, தண்ணீர், பழச்சாறு, செருப்பு, குடை ஆகியவற்றை தானமாக வழங்கினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே மறக்காமல் இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News March 6, 2026

அரியலூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

image

அரியலூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 6, 2026

அரியலூர்: குளத்தில் மூழ்கி பெண் உயிரிழப்பு!

image

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள நாச்சியார் குளத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவர் கங்கைகொண்ட சோழபுரம் பள்ளிக்கூட தெருவைச் சார்ந்த ரவி என்பவர் மனைவி பஞ்சவர்ணம் என்பது பின்னர் தெரியவந்தது. மேலும் இவர் கங்கைகொண்டசோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!