News September 1, 2025
அரியலூர் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக இரவு நேரங்களில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதன்படி (செப்.1) ரோந்து பணி செல்லக்கூடிய அதிகாரிகளின் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவரச காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்புகொண்டு பயன்பெறலாம். அல்லது 100ஐ அழைக்கவும். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
Similar News
News September 2, 2025
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி அறிவிப்பு

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் சார்பில் செப்.9, 10ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 என பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு ரூ.2,000 வழங்கப்படும். போட்டிகள் காலை 9 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 1, 2025
அரியலூர்: புகார் அளிக்க இதை தெரிஞ்சி வச்சிக்கோங்க!

அரியலூர் மக்களே நீங்கள் வாங்கும் பொருள் அல்லது சேவையில் குறைகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பணம் கொடுத்து வாங்கிய பொருளில் காலாவதி, கெட்டுப்போன, போலியானவை போன்ற குறைகள் இருந்தால், வாங்கிய பொருளின் Bill-யை வைத்து சட்டப்படி அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளிப்பதன் மூலம் உரிய இழப்பீடு பெற முடியும். இதனை அனவருக்கும் SHARE பண்ணுங்க. நீங்களும் விழிப்புணர்வுடன் இருங்கள்!
News September 1, 2025
சிறுபான்மையினருக்கான ஆய்வுக் கூட்டம் அறிவிப்பு

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சொ.ஜோ அருண் தலைமையில் வருகின்ற 10ம் தேதி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதில் சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிறுபான்மையினத்தைச் சார்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு குறைகளையும் சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்கான தக்க கருத்துக்களையும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.