News October 17, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.16) இரவு 10 மணி முதல் இன்று (அக்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News October 17, 2025
அரியலூர்: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

தீபாவளி நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் செல்ல திட்டமிட்டிருப்போம். அவ்வாறு நீங்கள் பயணிக்கும் போது பேருந்துலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதற வேண்டாம். ‘044-49076326’ என்ற எண்னை தொடர்பு கொண்டு, உங்கள் டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும் உங்கள் பொருட்கள் அனைத்தும் பத்திரமாக வந்து சேரும். ஷேர் பண்ணுங்க…
News October 17, 2025
அரியலூர்: சாலையில் தடுப்புகள் அமைப்பு

அரியலூர் தவுத்தாய் குளம் ரவுண்டானாவில் இருந்து செந்துறை ரவுண்டானா வரை உள்ள புறவழிச்சாலையை புதிய சாலையாக அமைக்கும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்றது. இப்பணிகள் முடிவடைந்த நிலையில் இப்புறவழிச்சாலையில் சாலை தடுப்புகள் மற்றும் சாலையில் சென்டர் மீடியனாக பேரல்கள் அமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
News October 17, 2025
அரியலூர்: தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம்

அரியலூரில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் வரும் 24-ம் தேதி தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பல்வேறு தனியார்த் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 300-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளார். SHARE IT NOW…