News February 23, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.22) இரவு 10 முதல் இன்று (பிப்.23) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News March 2, 2026
அரியலூர்: பரப்புரையில் ஈடுபட்ட திமுகவினர்

அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில், தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில், திமுகவினர் வீடு வீடாக சென்று பரப்புரையில் ஈடுபட்டனர். திமுக அரசின் சாதனைகளையும் செயல் திட்டங்களையும் பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வண்ணமாக, வீடு வீடாக சென்று பரப்புரையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News March 2, 2026
அரியலூர்: தூக்கி வீசப்பட்டு காதலர்கள் பலி

இடுக்கி மாவட்டம் கேரளாவை சேர்ந்த ஆதித்யா மற்றும் மருங்கலா குறிச்சி காலனி தெருவை சேர்ந்த சங்கர் மகள் சரண்யா இருவரும், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு ஆமணக்கு தோண்டி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.
News March 2, 2026
அரியலூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், 481 ரேஷன் கடைகளை சேர்ந்த 23,288 குடும்ப அட்டைதாரர்களுக்கு, அவர்களின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், இன்று மார்ச் மாதத்தில் 2, 3 ஆகிய தேதிகளில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.


