News December 24, 2025
அரியலூர்: இதை MISS பண்ணிடாதிங்க!

அரியலூர் மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், நாளை மறுநாள் (டிச.26) எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு இந்த முகாம் தொடங்கி நடைபெற உள்ளது. முகாமில் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொண்டு, சமையல் எரிவாயு தொடர்பான குறைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 31, 2025
அரியலூர்: கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்

அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், காத்திருப்புப் போராட்டம் நேற்று (டிச.30) மாலை நடைபெற்றது. இப்போராட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், கிராம நிர்வாக அலுவலரின் அலுவலகங்களை நவீனமயமாக்குதல் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெறுகிறது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
News December 31, 2025
அரியலூர்: கள்ள சந்தையில் மது விற்ற பெண் கைது

விக்கிரமங்கலம் காவல்துறையினர், ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது கள்ள சந்தையில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி ஸ்ரீபுரந்தானைச் சேர்ந்த சகுந்தலா என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்பொழுது அவரது வீட்டின் பின்புறம் இருந்து விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்து, சகுந்தலாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 31, 2025
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை பிடிப்பதற்கும் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வது வழக்கம். அதன்படி நேற்று (டிச.30) இரவு முதல் இன்று(டிச.31) காலை வரை ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யவும். இதனை ஷேர் பண்ணுங்க.


