News November 9, 2025

அரியலூர்: ஆய்வு மேற்கொண்ட மாவட்ட எஸ்பி

image

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர்களுக்குக்கான எழுத்துத் தேர்வு இன்று (நவ.09) நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி நேற்று (நவ.08) தேர்வு நடைபெறும் மையங்களை ஆய்வு செய்தார். மேலும் பாதுகாப்பு பணிகளுக்கு செல்லும் காவல்துறையினருக்கு அறிவுரையும் வழங்கினார்.

Similar News

News November 9, 2025

அரியலூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News November 9, 2025

அரியலூர்: தனிமையில் இருந்த இளைஞர் தற்கொலை

image

அரியலூர் மாவட்டம், தளவாய் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முள்ளுக்குறிச்சி வடக்குத்தெரு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (34). இவர் வீட்டில் தனியாக இருந்த போது திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News November 9, 2025

அரியலூர்: குரூப்-2 தேர்விற்கு இலவச பயிற்சி

image

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய, மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நவ.10-ம் தேதி முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!