News January 7, 2026
அரியலூர் ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் இயலாது. ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவைத்துள்ளார்.
Similar News
News January 28, 2026
அரியலூர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஜனவரி – 2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற (30.01.2026) வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி அறிவித்துள்ளார்.
News January 28, 2026
அரியலூரில் அறுவடை இயந்திர வாடகை நிர்ணயம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில், தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிர்ணய கூட்டம் நடைபெற்றது. பெல்ட் டைப் இயந்திரத்திற்கு மணி ரூ.2600, டயர் டைப் இயந்திரத்திற்கு மணி ரூ.1800 என தீர்மானிக்கப்பட்டது. அரசு இயந்திரங்கள் குறைந்த வாடகையில் முன்பதிவு மூலம் பயன்படுத்தலாம். உழவர் செயலி வழியாக தனியார் உரிமையாளர்களை தொடர்புகொள்ளலாம்.
News January 28, 2026
அரியலூர்: திருமணத் தடை தீர்க்கும் நந்தி பகவான்

அரியலூர், திருமழபாடி என்ற ஊரில் அருள்மிகு வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் நந்தி பகவானுக்கு இங்கு தான் திருமணம் நடைபெற்றது. இங்கு திருமணம் தடை இருப்பவர்கள், திருமணம் தாமதமாபவர்கள் எல்லாம் பங்குனி புனர்பூசம் அன்று நடைபெறும் நந்தியின் திருமணத்தை பார்த்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். மணமுடிக்காத உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.


