News December 14, 2025

அரியலூர் ஆட்சியர் அறிவிப்பு!

image

அரியலூர் மாவட்டத்தில், டிசம்பர் 17-26 வரை 7 நாட்கள் ஆட்சிமொழிச் சட்ட வாரம் காலை 10-12.30மணி வரை கொண்டாடப்பட உள்ளது. ஆட்சிமொழிச் சட்ட வாரத்தின் இறுதி நாளான டிச.26 அன்று பொதுமக்கள் ஆட்சிமொழிச் சட்டத்தை அறியும் வகையில் விளம்பர பதாகைகள் ஏந்தி அரசுப் பணியாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

Similar News

News December 15, 2025

அரியலூர்: மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களது மனுக்களை நேரடியாக ஆட்சியரிடம் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுமை வீடுகள், இலவச மனை பட்டா, கடனுதவி, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை, மாவட்ட ஆட்சியரிடம் அளித்து பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 15, 2025

அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

அரியலூர், ஆண்டிமடம் புனித மார்த்தினார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நாளை நடைபெறுகிறது. இந்த முகாமில் பல்வேறு துறை சார்ந்த டாக்டர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலந்து கொண்டு 18 வயது வரையுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளை பரிசோதனை செய்து, மருத்துவ மதிப்பீடு செய்யவுள்ளனர். இதில், தகுதியுடைய குழந்தைகளுக்கு அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News December 15, 2025

அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில், இன்று (டிச.14) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!