News September 9, 2025

அரியலூர்: ஆசிரியர் தேர்வுக்கு நாளை கடைசி நாள்!

image

அரியலூர் மக்களே, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க நேற்று (செப்.8) இறுதி நாளாக இருந்த நிலையில், நாளை (செப்.10) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனே <>https://trb.tn.gov.in/ <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..

Similar News

News September 10, 2025

அரியலூர்: மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

image

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் குழந்தைகள் நல அமைப்பு சிறப்பு பணி (STF) மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் குழந்தை கடத்தல் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் குற்றங்களை தடுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சமூக நல அலுவலர், பாதுகாப்பு அலுவலர் மற்றும் சகோதர அலுவலர்கள் கலந்துகொண்டு செயல் திட்டங்களை அமைத்தனர்.

News September 10, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆட்சியர் ஆய்வு

image

செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுகளத்தூர், துளார் மருவத்தூர் மற்றும் பொன்பரப்பி ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து பொன்பரப்பி கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

News September 9, 2025

விளையாட்டு வீரர்களுடன் சிலம்பம் சுற்றிய எம்எல்ஏ

image

இன்று (9.9.2025) செவ்வாய்க்கிழமை காலை, அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில்,
மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுடன் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா ஆகியோர் சிலம்பம் சுற்றி போட்டியினை துவக்கி வைத்தனர்.

error: Content is protected !!