News March 21, 2024

அரியலூர் அருகே விபத்து: ஒருவர் பலி

image

அரியலூர் பெரியகற்கை கிராமத்தை சேர்ந்தவர் விஜயக்குமார். நேற்று(மார்ச்.20) ஆண்டிமடம் – விருத்தாச்சலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 5, 2025

அரியலூர்: திருமணத் தடை தீர்க்கும் நந்தி பகவான்

image

அரியலூர், திருமழபாடி என்ற ஊரில் அருள்மிகு வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் நந்தி பகவானுக்கு இங்கு தான் திருமணம் நடைபெற்றது. இங்கு திருமணம் தடை இருப்பவர்கள், திருமணம் தாமதமாபவர்கள் எல்லாம் பங்குனி புனர்பூசம் அன்று நடைபெறும் நந்தியின் திருமணத்தை பார்த்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். மணமுடிக்காத உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News April 5, 2025

அரியலூரில் மின்நுகர்வோர் சிறப்பு முகாம்

image

அரியலூர் மாவட்டத்தில் மின்நுகர்வோர் சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று (ஏப்.05) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. அதில் மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம். மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்வாரிய இயக்கம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர்கள் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறும்.

News April 5, 2025

ஆடிட்டரிடம் ரூ.1 கோடி பறித்த இன்ஸ்பெக்டர் கைது

image

தஞ்சையைச் சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரன் என்பவர் அவருக்கு சொந்தமான 80 சென்ட் இடத்தில் அவர் வளர்த்த 30 தேக்கு மரங்களை அனுமதியின்றி வெட்டியதாக பதியப்பட்ட வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதாகக் கூறி, தர்மபுரியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் அரியலூரைச் சேர்ந்த நெப்போலியன் என்பவர் ரூ.1 கோடி பணத்தை ஏமாற்றி பெற்றதாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

error: Content is protected !!