News August 26, 2025
அரியலூர்: அரசு பேருந்து குறித்து புகார் அளிக்க வேண்டுமா?

அரியலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் குறித்து, உங்களது புகார் அல்லது குறைகளை தெரிவிக்க ‘1800 599 1500’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம் பேருந்து கால தாமதமாக வருவது, நிற்காமல் செல்வது, ஓட்டுநர் அல்லது நடத்துநர் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்து கொள்வது குறித்து உங்களால் வீட்டிலிருந்த படியே புகார் தெரிவிக்க முடியும். இந்த தகவலை SHARE செய்து அனைவருக்கும் தெரியப்படுத்துங்க!
Similar News
News August 26, 2025
அரியலூர்: தாசில்தார் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது தாசில்தார் அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், அரியலூர் மாவட்ட மக்கள் 04329-228442 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க
News August 26, 2025
அரியலூர்: போக்சோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிளஸ்-1 படித்து வந்த 16 வயது மாணவி ஒருவர், கடந்த 2021-ம் ஆண்டு அந்த மாணவி அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் அந்த மாணவி, வீட்டைவிட்டு வெளியேறி தஞ்சாவூர் மாவட்டம் கரந்தைக்கு சென்றுள்ளார். அங்கு, ராஜசேகர் (34) என்பவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்த போக்சோ வழக்கில் ராஜசேகருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
News August 26, 2025
அரியலூர்: காவல்துறை சார்பில் அறிவுறுத்தல்!

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் வாகனத்தை இயக்கினால் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும், வாகன உரிமையாளருக்கு ரூ 25,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், வாகனத்தை இயக்கிய சிறாருக்கு 25 வயது நிரம்பும் வரை ஓட்டுநர் உரிமம் பெற தடை விதிக்கப்படும் எனவும், மேலும் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளருக்கு சிறை தண்டனை கிடைக்க பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!