News December 14, 2025

அரியலூர்: அரசு பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு…

image

அரியலூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள், தங்களது புகார்களை தெரிவிக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் ‘1800 599 1500’ என்ற கட்டணமில்லா புகார் எண்ணை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளை ஏற்ற மறுப்பது, பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்காமல் செல்வது, தாமதமாக வருவது, சில்லறை பிரச்சனை, ஓட்டுநர் அல்லது நடத்துநரின் தவறான நடத்தை போன்ற புகார்களை பயணிகள் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News March 6, 2026

அரியலூர்: குளத்தில் மூழ்கி பெண் உயிரிழப்பு!

image

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள நாச்சியார் குளத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவர் கங்கைகொண்ட சோழபுரம் பள்ளிக்கூட தெருவைச் சார்ந்த ரவி என்பவர் மனைவி பஞ்சவர்ணம் என்பது பின்னர் தெரியவந்தது. மேலும் இவர் கங்கைகொண்டசோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

News March 6, 2026

அரியலூர்: உழவர் நல சேவை மையங்களில் ஆய்வு!

image

தமிழக முதல்வரால் தொடக்கி வைக்கப்பட்ட வேளாண்மை படிப்பு தோட்டக்கலை படிப்பு பட்டதாரிகளுக்காக, உழவர் நல சேவை மையம் தொடங்கப்பட்டது. அந்தவகையில் அரியலூர் மாவட்டத்தில் 12 உழவர் நல சேவை மையங்கள் பயன்பாட்டிலிருந்து வருகின்றன. இதில் தா.பழூர் வட்டாரத்தில் உள்ள சுந்தரேசபுரம், சுத்தமல்லி, நடுவலூர், வெண்மான் கொண்டான் உள்ளிட்ட உழவர் நல சேவை மையங்களை வேளாண்மை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

News March 6, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.05) இரவு 10 முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!