News January 2, 2025
அரியலூரில் 34 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2024ஆம் ஆண்டில் கொலை, கொள்ளை, மது விற்பனை, மோசடி, பாலியல் குற்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மொத்தம் 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 2023ஆம் ஆண்டில் இதேபோல் மொத்தம் 28 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 16, 2025
அரியலூர்: வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் தங்கம் திருட்டு

தா.பழூர் அருகே உள்ள கூழாட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையன். இவர் திருச்சியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். தனது சொந்த ஊரான கூழாட்டுக்குப்பம் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு விடுமுறை காலங்களில் செல்வது வழக்கம். அந்தவகையில் தீபாவளி விடுமுறைக்கு சென்ற நிலையில், அவரது வீட்டில் வைத்திருந்த 7 பவுன் தங்க சங்கிலி, பித்தளை பாத்திரங்கள், டி.வி ஆகியவை திருடப்பட்டிருப்பதாக புகார் அளித்துள்ளார்.
News October 16, 2025
அரியலூர்: டாஸ்மாக்கில் திருட முயன்றவருக்கு குண்டர் சட்டம்

அரியலூரைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் தனது நண்பர்களான அலெக்ஸ் பாண்டியன், சுரேஷ்குமார் ஆகியோருடன் கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி பாலம்பாடி டாஸ்மாக் கடையில் திருட முயற்சித்ததாக அரியலூர் போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். நவநீதகிருஷ்ணன் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட எஸ்பி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்தனர்.
News October 16, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டம், முழுவதும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும் குற்றவாளிகளை பிடிப்பதற்கும் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வது வழக்கம். அதன்படிஇரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்களை வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும். இத்தகவலை ஷேர் செய்யுங்கள்.