News March 23, 2024
அரியலூரில் தேர்தல் முன்னேற்பாடுகள் ஆய்வு கூட்டம்

அரியலூரில் மக்களவைத் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து பொறுப்பு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்ண தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் இருப்பு, சமூக வலைத்தளங்களை கண்காணித்தல், தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள், தேர்தல் செலவினங்கள், தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
Similar News
News November 5, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் (04.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகளின் விபரம் மற்றும் தொடர்பு எண்கள் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
News November 4, 2025
அரியலூர்: வீரர்களை வாழ்த்திய அமைச்சர்

அரியலூர் மாவட்டம், குன்னம் தொகுதி செந்துறை ஒன்றியம் பொன் பரப்பி மேல்நிலைப்பள்ளியில், மாநில அளவிலான கைப்பந்து போட்டிக்கான தகுதி தேர்வு (நவ.4) இன்று நடைபெற்றது. இதில் மின்சார துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு வீரர் மற்றும் வீராங்கனை வாழ்த்தினார். இதில் செந்துறை ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
News November 4, 2025
அரியலூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <


