News April 12, 2024
அரியலூரில் சிறுத்தை ஆட்சியர் எச்சரிக்கை

அரியலூர் செந்துறையில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில் கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். கால்நடைகள் வைத்திருப்போர் அதனை பாதுகாப்பாக வைத்து கொள்ளவும்,பொதுமக்களின் பாதுக்காப்பை உறுதிபடுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஆட்சியர் அனிமேரி அறிவித்துள்ளார். சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க 63852 85485 என்ற வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News January 27, 2026
அரியலூர்: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 27, 2026
அரியலூர் மாவட்டத்தில் இப்படியொரு இடமா?

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும், அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலே இருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது. கங்கை கொண்ட சோழபுரம் சென்றால் இந்த இடத்தை MISS பண்ணாதீங்க, SHARE IT…
News January 27, 2026
அரியலூர்: இன்று இங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தைக்குடம், ஓலையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.27) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், பெரியாத்துக்குறிச்சி, ஓலையூர், விழுதுடையான் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


