News December 31, 2024

அரியலூரில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது குற்றம்

image

அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வாகனம் ஓட்டுவது குறித்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொது மக்களுக்கு இடையூறு மற்றும் விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டுவது, பொது சாலையில் சாகசம் செய்வது, போக்குவரத்து விதி மீறல் சட்டப்படி குற்றமாகும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 19, 2025

அரியலூரில் இப்படியான இடங்களா!

image

1.வேட்டக்குடி- கரையவெட்டி பறவைகள் சரணாலயம்: இச்சரணாலயம், புலம்பெயரும் நீர்ப்பறவைகளுக்கான, தமிழ்நாட்டிலுள்ள மிக முக்கியமான நன்னீர் ஏரிகளுள் ஒன்றாக விளங்குகிறது.
2. விக்கிரமங்கலம் புத்தர் சிலைகள்: சோழர் காலத்தில் விக்கிரமசோழபுரம், ஒரு புகழ்பெற்ற வர்த்தக மற்றும் வாணிப மையமாக இருந்தது. சோழர் காலத்திய அழகிய ஜெயின் மற்றும் புத்தர் சிற்பங்கள் இந்த கிராமத்தில் பாதுகாக்கப்படுகிறது. இதனை SHARE பண்ணுங்க.

News October 19, 2025

அரியலூர்: நெல் சேமிப்பு நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

அரியலூர் மாவட்டம் தேளுர் ஊராட்சியில் உள்ள நெல் சேமிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் நெல் இருப்பினை தொடர்ந்து பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் எனவும், நெல் மூட்டைகள் நிலையத்திற்கு வரும் போதும் மற்றும் அவை பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும்போதும் எடைகள் சரியாக உள்ளதா என்பதை உறுதிபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

News October 19, 2025

அரியலூர்: ஒப்பனை, பச்சை குத்தல் பயிற்சி – ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியிகளுக்கு ஒப்பனை, அழகுக்கலை, பச்சை குத்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்ட உள்ளது. இதற்கு 8 ஆம் வகுப்பு முடித்து 35 வயதிற்குக்குட்பட்டவர்கள், <> www.tahdco <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தாட்கோ மேலாளர் அலுவலத்தை அணுகலாம் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!