News January 26, 2025
அரிட்டாபட்டி கிராம மக்கள் மீதான வழக்கு வாபஸ்

அரிட்டாபட்டி கிராம மக்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்ததன் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக அரிட்டாபட்டி சுற்றியுள்ள கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், அந்த வழக்குகள் வாபஸ் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Similar News
News August 21, 2025
மதுரை அரசு பஸ் பயணிகள் கவனத்திற்கு!

மதுரை மக்கள் கவனத்திற்கு, நீங்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, தவறுதலாக உங்களின் உடமைகளை பஸ்ஸிலேயே மறந்துவிட்டால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் பேருந்து எண் மற்றும் விவரங்களை 18005991500 என்ற எண் (அ) 94425 90538 அழைத்து தெரிவிக்கலாம். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு, உங்கள் பொருளை எங்கு வந்து பெற வேண்டும் என்பதை தெளிவாக கூறுவர். *ஷேர் பண்ணுங்க
News August 21, 2025
தவெக மாநாட்டிற்கு செல்லும் வழியில் தொண்டர் பலி!

மதுரை தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு செல்லும் வழியில் தொண்டர் ஒருவர் மாரடைப்பால் பலியானார். தவெக மாநாட்டிற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட பிரபாகரன் என்பவர் சக்கிமங்கலம் என்ற இடத்தில் சிறுநீர் கழிக்க சென்றபோது மயக்கமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
News August 21, 2025
மதுரையில் விஜய் போட்டியா..?

மதுரையில் தவெகாவின் 2வது மாநில மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இதில் வேட்பாளர் பட்டியலை வௌியிட போகிறேன் என கூறிய விஜய், மதுரை கிழக்கு என ஆரம்பித்து மதுரையில் உள்ள 10 தொகுதிகளிலும் தானே போட்டியிடுவேன் என்று சொல்லி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தானே போட்டியிடுவதாக அறிவித்தார்.