News January 22, 2026

அரிசி ரேஷன் கார்டுக்கு மாற வேண்டுமா?

image

பொங்கல் பரிசாக தமிழக அரசு ₹3,000 வழங்கிய நிலையில், அதை அரிசி அட்டை இல்லாதவர்கள் பெறமுடியாமல் போனது. இதுதொடர்பாக, சட்டமன்றத்தில் எழுப்பப்பட கேள்விக்கு அமைச்சர் சக்ரபாணி முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். தகுதியுள்ளவர்கள் சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என்றும், துறை சார்ந்த அதிகாரிகள் ரேஷன் கடைகளுக்கு சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Similar News

News January 30, 2026

காங்., தனித்து போட்டியிட முடியாது: கார்த்தி சிதம்பரம்

image

தமிழ்நாட்டில் தனித்து தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் காங்கிரஸ் கட்சி இல்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். மேலும், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும்போது சிறுபான்மையினர் பாதுகாப்பாக உணர்கிறார்கள்; திமுக தலைமையிலான கூட்டணிக்கு காங்., ஒரு மதச்சார்பற்ற தோற்றத்தை அளிக்கிறது என தனியார் டிவி நிகழ்ச்சியில் கூறிய அவர், பின்புற வாசல் வழியாக அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளதாகவும் விமர்சித்தார்.

News January 30, 2026

குழந்தைகளிடம் இதை கண்டுக்காம இருந்துடாதீங்க!

image

பெற்றோர்களே, உங்கள் குழந்தை ஓவர் சுட்டித்தனமாக, ஹைப்பர் ஆக்டிவாக இருக்கிறார்களா? அவர்களை, மனநல (அ) குழந்தைகள் நல டாக்டரிடம் அழைத்துச் செல்வது நல்லது. மனநல டாக்டரிடம் ஆலோசனை பெறுவதை அவமானமாக நினைக்கவேண்டாம். அது ஒரு சாதாரண விஷயம்தான். எனவே அலட்சியமாக இருந்து உங்கள் குழந்தையின் மனநலத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதீர்கள். விழிப்புணர்வுக்காக அனைவருக்கும் SHARE THIS.

News January 30, 2026

ரேஷன் அட்டைதாரர்களுக்கு.. அமைச்சர் ஹேப்பி நியூஸ்

image

தரமான பொருள்கள் மட்டுமே ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். முறைகேடுகளை தடுக்கும் வகையில் ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் அனுப்புவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 21 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் விரைவில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!