News October 26, 2024

அரிசியின் தரம் குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என ஆட்சியர் பிரசாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். நியாய விலை கடையில் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்புச்சத்து உள்ளது. ரத்த சோகையை தடுப்பதாகவும், இதனால் பொது விநியோகத்திட்ட அரிசியினை வாங்கி பயன்படுத்தலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 2, 2026

உளுந்தூர்பேட்டையில் பயங்கர விபத்து!

image

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த கணேசன் மற்றும் அவரது மகன் ராம்குமார் ஆகிய இருவரும் சொந்த வேலையாக உளுந்தூர்பேட்டை செல்வதற்காக வாகனத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி எதிரே சாலையை கடக்க முயன்றனர். அப்போது, அந்த வழியாக வந்த பதிவெண் இல்லாத பைக் மோதியது. விபத்தில் கணேசன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து நேற்று(பிப்.1) போலீசார் வழக்கு பதிந்தனர்

News February 2, 2026

கள்ளக்குறிச்சி: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

image

கள்ளக்குறிச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 2, 2026

கள்ளக்குறிச்சி கிராமத்திற்கு விருது!

image

டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவின் போது, அரசின் திட்டப் பணிகளை உடனுக்குடன் செய்து முடித்த சிறந்த கிராமமாக ரங்கப்பனூர் ஊராட்சிக்கு விருது வழங்கப்பட்டது.இதனைப் பெற்றுக் கொண்ட ஊராட்சி தலைவர் அர்ச்சனா காமாராஜ், ரிஷிவந்திடம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திக், கலெக்டர் பிரசாந்த் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

error: Content is protected !!