News March 5, 2026
அரவக்குறிச்சி: சாலை விபத்தில் ஒருவர் பரிதாப பலி!

அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (56). இவர் தனது மகள் திவ்யபாரதி (29) உடன் மலைக்கோவிலுார் பாலம் அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இதே திசையில் நவீன் குமார் (26), என்பவர் வேகமாக ஒட்டி வந்த டூவீலர் ரவிச்சந்திரன் ஓட்டி வந்த டூவீலர் மீது மோதியது. படுகாயம் அடைந்த ரவிச்சந்திரன் கரூர் GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 10, 2026
கரூர்: இனி WHATSAPP-ல்.. பிறப்பு, இறப்பு, சாதி சான்றிதழ்!

கரூர் மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்துள்ளது. தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும். SHARE பண்ணுங்க.
News March 10, 2026
கரூர்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News March 10, 2026
BREAKING கரூர் துயரச் சம்பவம் செந்தில் பாலாஜி ஆஜராகிறார்!

கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது; இது குறித்து ஊடகங்களில் முரணான தகவல்கள் வெளியான நிலையில், வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் ஆஜராகி உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்


