News January 2, 2026
அரவக்குறிச்சி கீழே விழுந்த பெண் உயிரிழப்பு

அரவக்குறிச்சி, சுக்காம்பட்டியை சேர்ந்தவர் ராமுதாயி (52). இவர் தனது மகன் குணசேகரனுடன் டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தில் பின்னால் அமர்ந்து கொண்டு குள்ளம்பட்டி சாலையில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ராமுதாயி படுகாயம் அடைந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராமுதாயி மகள் மேனகா புகாரில், அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News January 5, 2026
கரூர் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “அதிக வேகம் கடுமையான காயங்களையும் மரணத்தையும் ஏற்படுத்தும்” என காவல்துறை தெரிவித்துள்ளது. அவசரநிலைகளில் கரூர் மாவட்ட காவல்துறை உதவி எண் 9498100780, அவசர உதவி எண் 100, ஆம்புலன்ஸ் எண் 108 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
News January 5, 2026
குளித்தலை: மகளைக் காப்பாற்ற.. தந்தை உயிரிழந்த சோகம்

குளித்தலை பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரின் மகள் தனலட்சுமியை வீட்டில் வேலை செய்யாதது குறித்து திட்டியதற்கு கோபித்துக் கொண்ட தனலட்சுமி தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். அப்போது மகள் கிணற்றின் ஓரத்தில் நின்றதை பார்த்து காப்பாற்ற குதித்த அண்ணாதுரை நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 5, 2026
கரூர்: ரூ.1,20,940 சம்பளத்தில் BANK வேலை! APPLY

கரூர் மக்களே, பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <


