News December 29, 2025
அரவக்குறிச்சியில் பீகார் வாலிபர் மரணம்!

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சுராஜ்குமார் (23). இவர் கரூர் தாளப்பட்டி பகுதியில் உள்ள பிளைவுட் கம்பெனியில் கடந்த ஒரு வருடமாக தங்கி வேலை பார்த்து வருகின்றார்.நேற்று நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்து பலத்த காயத்துடன் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த போது அவர் உயிரிழந்தார். இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News December 31, 2025
கரூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4. முதியோருக்கான அவசர உதவி -1253
5. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
யாருக்காவது நிச்சயம் இது உதவும், எனவே இதனை அனைவருக்கும் அதிகம் ஷேர் பண்ணுங்க!
News December 31, 2025
கரூர் அருகே பெண் அதிரடி கைது!

கந்தம்பாளையத்தை சேர்ந்த விசாலாட்சிக்கும், கார்த்திக் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நடையனூர் அருகே கார்த்திக்கின் சகோதரி அமுதாவும் (50), அவரது மகன் ஜெகனும் வீட்டில் இருந்தபோது விசாலாட்சி மற்றும் ஆண் ஒருவர் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த வேலாயுதம்பாளையம் போலீசார் விசாலாட்சியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 31, 2025
கரூர்: இதைச் செய்யாவிட்டால் சிக்கல் நிச்சயம்!

பான் ஆதார் கார்டை டிசம்பர் 31ஆம் தேதியான இன்றுக்குள் இணைக்க வேண்டும். இதை செய்ய தவறினால் உங்களால் வங்கிக் கணக்கைத் தொடங்க முடியாது, வங்கிகளிடமிருந்து கடன் கூட பெற முடியாது, சில அரசு திட்டங்களின் பலன்களைப் பெறுவது கூட சிக்கலாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. <


