News November 17, 2024
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி!

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். கடலூர் ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் காவலரான இவர், திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த தம்பத்திடம், அவரது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4,50,000 பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் நேற்று பாண்டியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News August 6, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடம் பகுதியில் இன்று (ஆக.06) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
News August 6, 2025
விழுப்புரத்தில் மாபெரும் வேலைவாயப்பு முகாம்

விழுப்புரம் ஊரக வாழ்வாதார இயக்கம்&வெற்றி நிச்சயம் திட்டம் சார்பில் வரும் ஆக.9 அன்று செஞ்சி ஸ்ரீ ரங்கபூபதி கலை&அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் 15,000-க்கும் மேற்பட்ட ஆட்களை தேர்வு செய்கின்றன. 8th, 10th, 12th,ITI,DIP.,UG,PG, BE படித்தவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். தகவலுக்கு 9787928247, 8248727719, 9080674133. *ஷேர் பண்ணுங்க
News August 6, 2025
விழுப்புரம் தாசில்தார் மீது புகாரளிப்பது எப்படி?

விழுப்புரம் மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04146-259216) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்