News February 28, 2026
அரசு வேலை மோசடி: 2 பேருக்கு 6 ஆண்டு சிறை

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கில் ஈரோடு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. தங்களை அதிகாரிகள் என பொய்க்கூறி ஏமாற்றிய ராஜேஸ்வரன் (42) மற்றும் சென்னியப்பன் (40) ஆகிய இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்குத் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
Similar News
News February 27, 2026
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது: 100, சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098.
News February 27, 2026
ஈரோடு: துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது!

சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணிக்கு சென்றபோது கையில் துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த இருவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும், சிக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், கிருஷ்ணமூர்த்தி என்பதும் மானை வேட்டையாடுவதற்காக வனப்பகுதிக்கு வந்ததாக கூறியுள்ளனர். அவர்களை கைது செய்த வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
News February 27, 2026
ஈரோடு: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <


