News April 29, 2024
அரசு மருத்துவமனை பணியாளர் சஸ்பெண்ட்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இயங்கி வரும் அரசு தலைமை மருத்துவமனையில் தினம்தோறும் நூற்றுக்கணக்கான வெளிப்புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு போதிய மருத்துவர் செவிலியர் இல்லாத காரணத்தால் நேற்று நோயாளி ஒருவருக்கு துப்புரவு பணியாளர் டிரிப்ஸ் போட்ட நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் பணியில் இருந்த தலைமை செவிலியர் மற்றும் செவிலியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News July 7, 2025
திருவாரூரில் ரோந்து காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 6, 2025
திருவாரூர்: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் பகுதி ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News July 6, 2025
திருவாரூர்: விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்

மத்திய அரசின் ‘கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் முதலீடு செய்தால் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள 18 – 40 வயதுடைய விவசாயிகள், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!