News June 19, 2024

அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு

image

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ரவி நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் எம்எல்ஏ ரவி பேசுகையில், “அரக்கோணம் அரசு மருத்துவமனையில் தலா 5 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக அரக்கோணத்தை தரம் உயர்த்த வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்” என்றார். மேலும், இந்த ஆய்வின் போது தலைமை மருத்துவர் நிவேதிதா மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

Similar News

News April 3, 2026

ராணிப்பேட்டை: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

ராணிப்பேட்டையில் வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர்!

News April 3, 2026

BIG NEWS – சோளிங்கர் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து சந்திக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 28 தொகுதிகளை ஒதுக்கி, திமுக அறிவித்த நிலையில், அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சோளிங்கர் தொகுதியில் A.M.முனிரத்தினம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

News April 3, 2026

ராணிப்பேட்டை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5. முதியோருக்கான அவசர உதவி -1253, 6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!