News May 21, 2024

அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று சென்னை கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு நேற்று இரவு ஒருவர் தகவல் தெரிவித்தார். கட்டுப்பாட்டு அறைக்கு வந்த எண்ணை வைத்து அரக்கோணம் டவுன் போலீசார் விசாரித்ததில் சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த கேசவன் என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கேசவன் மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி முதுகலை ஆசிரியர் என்பது தெரிந்தது.

Similar News

News November 8, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ-07) இரவு 10 மணி முதல் இன்று
(நவ.8) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 8, 2025

ராணிப்பேட்டை மக்களுக்கு விழிப்புணர்வு செய்தி

image

இன்று (நவ.7) ராணிப்பேட்டை காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் whatsapp அல்லது பிற செய்திடல் பயன்பாடுகள் மூலம் அனுப்பப்படும் ஆப் கோப்புகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடிய தீங்கு விளைவிக்கும் தீப்பொருள் இருக்கலாம் என விழிப்புணர்வு செய்தி வெளியிட்டுள்ளது. அவசரத்துக்கு/ உதவிக்கு அழைக்கவும்:1930 என தெரிவிக்கப்பட்டுள்ளது

News November 7, 2025

ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் சந்திரகலா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (நவ.07) விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் இணை இயக்குநர் செல்வராஜ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முதுநிலை மண்டல மேலாளர் ஏகாம்பரம் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். பின் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

error: Content is protected !!