News January 24, 2026
அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

ஆலங்குளம் கரும்பு பகுதியை சார்ந்தவர் மாசானபாண்டியன் (30) சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. ஆலங்குளத்தில் மாசானபாண்டியனின் இறுதிச்சடங்கின் போது ஆலங்குளம் வட்டாட்சியர் ஆதிநாராயணன் மற்றும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
Similar News
News February 4, 2026
தென்காசி: பாலியல் வழக்கில் பள்ளி தாளாளர் கைது

தென்காசி, பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியின் தாளாளர் செல்வசௌந்தர பாண்டியன் மீது, பாலியல் புகார் தெரிவித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்தை சிறுமியின் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார் பள்ளி நிர்வாகியை கைது செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்.
News February 4, 2026
தென்காசி மாவட்டத்தில் 499 பேர் கைது!

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி அங்ஙன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 488 பெண்கள் உட்பட 499 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
News February 3, 2026
தென்காசி மாவட்ட வட்டாச்சியர் எண்கள்!

1. திருவேங்கடம் – 04636-264400
2. சங்கரன்கோவில் – 04636-222270
3. சிவகிரி – 04636-250223
4. ஆலங்குளம் – 04633-270899
5. வீரகேரளம்புதூர் – 04633-277140
6. கடையநல்லூர் – 04633-245666
7. செங்கோட்டை – 04633-233276
8. தென்காசி – 04633-222262
(ஏதேனும் சந்தேகங்களுக்கு அழைத்தால் அலுவலக நேரத்தில் அழைக்கவும்) இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.


