News April 24, 2025

அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

image

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News November 8, 2025

திருச்சி: பழங்குடியின இளைஞர்களுக்கான பயிற்சி முகாம்

image

தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில், சேலம் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நாளை (நவ.8) வேலை வாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 97905 74437 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News November 8, 2025

திருச்சி: அரசு பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி விபத்து

image

திருச்சியில் இருந்து ஓசூர் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து நேற்று (நவ.07) பெருகமணி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த கார் மீது கட்டுபாட்டை இழந்து நேருக்குநேர் மோதியது. இதில், காரின் முன்பக்கம் முழுவதுமாக உருக்குலைந்ததுடன், காரில் பயணம் செய்த இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 7, 2025

திருச்சி: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

image

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கை முடக்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT

error: Content is protected !!