News April 24, 2025
அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News January 11, 2026
கடலூர்: மின்சாரம் தாக்கி மாணவர் சாவு

ஆலடி அடுத்த இருளக்குறிச்சியை சேர்ந்தவர் முத்து மகன் மணிகண்டன் (17). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மணிகண்டன், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மின்சாரம் இல்லாததால், அங்குள்ள மின்கம்பத்தில் ஏறி சரிசெய்ய முயன்றார். அப்போது அவர் மீது மின்கம்பி உரசியதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்து ஆலடி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
News January 11, 2026
கடலூர்: லட்சக் கணக்கில் மோசடி செய்தவர் கைது!

சிதம்பரத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் செல்வம். இவரிடம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எஸ். பெருமாள் (39) என்பவர் தனியார் ஆப் மூலமாக லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.7,61,050 பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து செல்வம் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் பெருமாளின் செல்போன் எண்ணின் மூலமாக அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து, நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News January 11, 2026
கடலூர்: லட்சக் கணக்கில் மோசடி செய்தவர் கைது!

சிதம்பரத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் செல்வம். இவரிடம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எஸ். பெருமாள் (39) என்பவர் தனியார் ஆப் மூலமாக லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.7,61,050 பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து செல்வம் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் பெருமாளின் செல்போன் எண்ணின் மூலமாக அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து, நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


