News February 16, 2025
அரசு பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

வாலாஜாபாத், ராஜவீதி பகுதியில் வசித்து வருபவர் பழனி. மர வியாபாரம் செய்து வரும் இவர், தனது உதவியாளர் வரதன் உடன் நேற்று (பிப்.15) வாலாஜாபாத் – தாம்பரம் சாலை சேர்க்காடு பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பைக்கில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது தாம்பரத்திலிருந்து வாலாஜாபாத் நோக்கி சென்ற அரசு பேருந்து அவர்கள் மீது மோதியது. இதில், வரதன் உயிரிழந்தார். பழனி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News November 14, 2025
செங்கல்பட்டு: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
செங்கல்பட்டு: வாடகை வீட்டில் பாலியல் தொழில்!

தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட மணிமங்கலம், வரதராஜபுரம் ஊராட்சி மகாலட்சுமி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், மசாஜ் சென்டர் பெயரில், பாலியல் தொழில் நடப்பதாக மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனை செய்ததில், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதை போலீசார் உறுதிபடுத்தினர். 3 பெண்களை மீட்டு, பாலியல் தொழில் நடத்தி வந்த பிரசாந், சபரீஷை போலீஸ் கைது செய்தனர்.
News November 14, 2025
செங்கல்பட்டு: சாலையில் படுத்திருந்த மாடால் விபத்து

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நேற்றிரவு, சாலையின் நடுவே படுத்திருந்த மாட்டின் மீது இருசக்கர வாகனத்தில் சென்ற முஜிப் (21) என்ற நபர் மோதி தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


