News March 25, 2025
அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து

திருத்தணி, சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள குன்னத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே முன்னால் சென்ற அரசு பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால் பின்னால் வந்த பிரகாஸ் என்பவரின் கார் அரசு பேருந்து மீது மோதியது. இதில் காரின் முன் பகுதி சேதமான நிலையில் காரில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News March 28, 2025
ஆவடி இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

ஆவடியில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 27, 2025
திருவள்ளூரில் அரசு சார்பில் நீச்சல் பயிற்சி

திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நீச்சல் குளத்தில் கோடை கால நீச்சல் பயிற்சி வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கு அனைவரும் விண்ணப்பிக்கலாம். நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நடைபெறும் 12 நாட்கள் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது என ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
News March 27, 2025
திருவள்ளூரில் தரிசிக்க வேண்டிய 6 முருகன் கோவில்கள்

1.திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்,
2.ஆண்டார்குப்பம் பால சுப்பிரமணியசுவாமி கோயில்,
3.சிறுவாபுரி முருகன் கோயில்,
4.சென்னீர்குப்பம் சுப்பிரமணியசுவாமி கோயில்,
5.சென்னை வடதிருச்செந்தூர் முருகன் கோயில்,
6.மணவூர் கிராமம் சுப்பிரமணியசுவாமி கோயில். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க