News June 30, 2024
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கால அவகாசம் நீட்டிப்பு

திருவண்ணாமலை, செங்கம் அருகே நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் கட்ட கலந்தாய்வு ஜூன் 18 ஆம் தேதி நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. மேலும் சில பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு அரசு உத்தரவின்படி நேரடி சேர்க்கை நடைபெற இருப்பதால் மாணவர்கள் நேரடியாக சான்றிதழ்களுடன் கல்லூரியில் முதல்வரை தொடர்பு கொள்ளுமாறு கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 6, 2025
தி.மலையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு (ஜூலை 6) இரவு 10 மணி முதல் நாளை காலை 06 மணி வரை இரவு ரோந்துக்கு தாலுக்கா வாரியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர காலத்தில் உங்கள் தாலுக்கா அதிகாரி அழைக்கலாம் மற்றும் 100 அழைக்கலாம் என மாவட்ட காவல் அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 6, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (06.07.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News July 6, 2025
தி.மலை பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிக்கும் ஸ்ரீ அண்ணாமலையார் சமேத உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் வரும் ஜூலை 10, வியாழக்கிழமை காலை 2.26 மணிக்கு தொடங்கி ஜூலை 11, வெள்ளிக்கிழமை காலை 3.11 மணிக்கு முடிவடையும் என்று ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.