News November 18, 2025
அரசு பஸ் மீது கிரேன் மோதிய விபத்தில் 6 பேருக்கு காயம்

கோத்தகிரியில் இருந்து சுண்டட்டி செல்லும் சாலையில் எஸ்.கைகாட்டி ராஜ்நகர் பகுதியில் நேற்று மாலை 6.30 மணிக்கு கிரேன் மூலம் மரத்துண்டுகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ்சின் கண்ணாடி மீது கிரேன் மோதியதில் கண்ணாடி உடைந்து கண்டக்டர் உள்பட பயணிகள் 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News November 18, 2025
நீலகிரி: ரூ.319 கோடி கடன் தள்ளுபடி-அமைச்சர் தகவல்

ஊட்டி கூட்டுறவு துறை சார்பில், 72 வது கூட்டுறவு வார விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சாமிநாதன் நீலகிரியில் விவசாய கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் மற்றும் நகை கடன் என, 319 கோடி ரூபாய் மதிப்பில் கடன் தள்ளுபடி செய்ததில், 40 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். மக்கள் நலன் கருதி இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்,” என்றார்.
News November 18, 2025
நீலகிரி: ரூ.319 கோடி கடன் தள்ளுபடி-அமைச்சர் தகவல்

ஊட்டி கூட்டுறவு துறை சார்பில், 72 வது கூட்டுறவு வார விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சாமிநாதன் நீலகிரியில் விவசாய கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் மற்றும் நகை கடன் என, 319 கோடி ரூபாய் மதிப்பில் கடன் தள்ளுபடி செய்ததில், 40 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். மக்கள் நலன் கருதி இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்,” என்றார்.
News November 18, 2025
நீலகிரியில் முக்கிய பகுதிகளில் மின் தடை அறிவிப்பு

ஊட்டி அடுத்த குந்தா துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மஞ்சூர், கீழ்குந்தா, தொட்டகொம்பை, பிக்கட்டி, முள்ளிகூர், தாய்சோலை, கோரகுந்தா, கிண்ணக்கொரை, இரியசீகை, மஞ்சக்கொம்பை, பெங்கால்மட்டம், அறையட்டி, கோட்டக்கல், முக்கிமலை, எடக்காடு, காயக்கண்டி ஆகிய பகுதிகளில் இன்று நவ.18 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. அதிகம் SHARE பண்ணுங்க!


