News October 31, 2025
அரசு பஸ் கோர விபத்து.. பள்ளி மாணவர்களுக்கு சோகம்

ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய கோர விபத்தில், பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் நத்தம் அருகே நடந்த இந்த விபத்தில், ஆட்டோ சுக்குநூறாக நொறுங்கியது. அதில் இருந்த டிரைவர், பள்ளி மாணவ, மாணவியர் உள்பட 11 பேர் அரசு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னால் சென்ற ஆட்டோ மீது அரசு பஸ் மோதியதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. SO SAD.
Similar News
News November 1, 2025
PM-ன் பேச்சை பொருட்படுத்த கூடாது: எஸ்.வி.சேகர்

TN-ல் பிஹார் தொழிலாளர்களை துன்புறுத்துவதாக PM பேசியதற்கு எஸ்.வி.சேகர் பதிலடி கொடுத்துள்ளார். பிஹார் சிறந்த மாநிலமாக இருந்தால் அங்கிருப்பவர்கள் ஏன் தமிழகத்திற்கு வர வேண்டும் என்றும் தமிழர்களுக்கு அங்கு வேலை கொடுக்கலாமே எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரில் BJP வெற்றி பெறும் எண்ணத்தில், அங்குள்ளவர்களை உசுப்பேற்றும் விதமாக PM மோடி பேசுவதை, பொருட்படுத்தக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
News November 1, 2025
உங்களுக்கு இந்த ஃபோபியா இருக்கா?

ஏதோ ஒன்றின் மீது ஏற்படும் அதீத அச்ச உணர்வையே ஃபோபியா என்று கூறுகின்றனர். பயம் பொதுவாக அர்த்தமுள்ளதாக இருக்காது. ஆனால் அதை உணருபவர்களுக்கு அது உண்மையானது. மக்களிடையே பொதுவாக காணப்படும் அச்சங்கள் மற்றும் அதற்கு என்ன ஃபோபியா என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு என்ன பயம் இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.
News November 1, 2025
இந்த ஓவியத்தின் விலை ₹120 கோடி

16-ம் நூற்றாண்டை சேர்ந்த முகலாய கால ஓவியர் பசவன் தீட்டிய ஓவியம், தற்போது ₹120 கோடிக்கு ($13.6 மில்லியன்) விற்பனை செய்யப்பட்டுள்ளது. மலையின் மீது மரங்களின் கீழ் சிவிங்கிப் புலிகள் குடும்பமாக ஓய்வெடுக்கும் காட்சி இதில் அற்புதமாக தீட்டப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள புகழ்பெற்ற கிறிஸ்டி ஏல நிறுவனம் தான் இதை விற்பனை செய்துள்ளது. கலையின் மதிப்பு என்றும் குறையாது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.


