News August 5, 2025
அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி உள்ளிட்ட அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் 2025-ம் ஆண்டிற்கான ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர 31.08.2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் சேரும் நபர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 5, 2025
வேப்பிலைக்காரி அலங்காரத்தில் துர்க்கை பரமேஸ்வரி அம்மன்

சிவகாசி பேருந்து நிலைய பகுதியில் உள்ள ஸ்ரீ துர்க்கை பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று ஆடிமாதம் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ வேப்பிலைக்காரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வேப்பிலையால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றதை தொடர்ந்து கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
News August 5, 2025
விருதுநகர் கூட்டுறவு வங்கியில் வேலை… JOB ALERT!

விருதுநகர் இளைஞர்களே, அனைத்து வகையான கூட்டுறவு வங்கித் துறையில் 1000க்கு மேலான உதவியாளர் காலியிடங்களுக்கு நேரடியாக ஆட்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். ஆக. 6 முதல் ஆக. 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு <
News August 5, 2025
விருதுநகர் மக்களே… இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க..

▶️ டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா இ.ஆ.ப மாவட்ட ஆட்சியர் 9444184000
▶️ இரா.ராஜேந்திரன் மாவட்ட வருவாய் அலுவலர் 04562-252348
▶️ மரு.க.பிர்தெளஸ் பாத்திமா எம்.டி. (சித்தா) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) 9445008161
▶️ டி.கண்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 9498101455
இந்த முக்கியமான தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க…