News May 22, 2024
அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள் கோட்டாட்சியர் அலுவலகங்கள் சப்-கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்த வேண்டும்
வெள்ளம் மற்றும் இதர இயற்கை இடர்பாடுகள் சம்பந்தமாக பெறப்படும் தகவல்களை உடனுக்குடன் உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். 1077 என்ற டோல் ப்ரீ எண்ணுக்கு வெள்ளம் சார்ந்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் நேற்று கூறினார்
Similar News
News August 21, 2025
கோவை: வாட்ஸ்அப்பில் சிலிண்டர் புக் செய்வது எப்படி?

மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம்.ஷேர் பண்ணுங்க!
News August 21, 2025
கோவையில் தொழுநோய் உஷார் மக்களே!

கோயம்புத்தூரில் புதிதாக 12 பேருக்கு தொழுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொழுநோய் மைக்கோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியா மூலம் பரவுகிறது. இந்த நோய் தோல் மற்றும் நரம்புகளை பாதிக்கிறது. இதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் நோய் பரவுதல் மற்றும் உடல் ஊனம் ஏற்படுவதை தடுக்க முடியும்.இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
News August 20, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஆகஸ்ட்.20) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.