News May 20, 2024
அரசு கல்லூரியில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் பதிவு செய்ய (மே.20) இன்று இறுதி நாளாகும். இந்நிலையில் மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாணவர் சேர்க்கை உதவி மையம் தொடர்பு கொள்ளலாம் -99417-77069, 99628-92406 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 14, 2025
தர்மபுரி: இரவு ரோந்து பணி விவரம்

தருமபுரி மற்றும் அரூர்க்கு (ஆகஸ்ட் 14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம் வெளியிட்டுள்ளது. தருமபுரி தலைமை அதிகாரியாக சிவராமன், அரூர் கரிகால் பாரி சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மற்றும் அரூர் சுற்றியுள்ள அனைத்து காவல் நிலையங்களும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரங்கள் மற்றும் தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
News August 14, 2025
தர்மபுரியில் இலவசம்! மிஸ் பண்ணிடாதீங்க

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கிராமப்புறப் பெண்களுக்கு, வருகிற ஆகஸ்ட் 18 முதல் 30 நாட்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி தொடங்கவுள்ளது. இந்தப் பயிற்சியில் உணவு இலவசமாக வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை அணுகலாம். SHARE பண்ணுங்க!
News August 14, 2025
தருமபுரி: பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

தர்மபுரி, நாளை சுதந்திர தின விழா நடைபெறுவதை ஒட்டி பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அழைப்பு விடுத்துள்ளனர். காலை 9.05 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியினை ஏற்றி வைத்தும், காவல் துறை அணிவகுப்பு மரியாதையினை ஏற்றும் சிறப்பிக்க உள்ளார்கள். பொதுமக்கள் இவ்விழாவிற்கு வருக தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.