News June 15, 2024

அரசு கல்லூரியில் பழங்குடி இன மாணவர் சேர்ப்பு

image

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 2024-25ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று (ஜூன் 15) நடந்த சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளார். இந்த மாணவருக்கு கல்லூரி முதல்வர் ரா.ராஜேந்திரன் சேர்க்கை ஆணையை வழங்கினார்.

Similar News

News August 15, 2025

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறப்புமிக்க முருகன் கோயில்கள்

image

கடலூர் மக்கள் கட்டாயம் செல்ல வேண்டிய மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில்கள்:
▶புது வண்டிபாளையம் சுப்பிரமணியர் கோயில்
▶திருமாணிக்குழி ஆதிசக்தி சிவபாலசுப்பிரமணியர் கோயில்
▶ பரங்கிப்பேட்டை முத்துக்குமரசுவாமி கோயில்,
▶மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில்
▶ வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணியர் கோயில்.

News August 15, 2025

கடலூர் மக்களே புகாரளிக்க இதை குறித்து கொள்ளுங்கள்!

image

கடலூர் மக்களே. நம் பகுதிகளில் சில சமையம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள், அளவுக்கதிகமா நபர்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இனிமேல் ஆட்டோக்களில் அதிகமான நபர்களை ஏற்றி செல்வதை பார்த்தால், உடனடியாக 04142-234035 என்ற எண்ணில் புகாரளியுங்கள். மேலும் உங்கள் பகுதி RTO அலுவலகத்திலும் புகாரளியுங்கள். SHARE IT!

News August 15, 2025

கடலூர்: 47 அரசு காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

image

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ’47’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே<<>> க்ளிக் செய்து, வரும் ஆக.29-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.96,000 வரை வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!