News May 13, 2024

அரசு கல்லூரியில் சேர மாணவிகள் ஆர்வம்

image

அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு அரசு கல்வி உதவி தொகை 1000 ரூபாய் வழங்குகிறது. இதன் காரணமாகவும் குறைந்த கட்டணம் என்பதாலும் நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் பல அரசு கல்லூரிகளில் சேர்ந்து பயில ஆர்வம் காட்டியுள்ளனர். இதனால் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி உள்ளிட்ட அரசு கலைக் கல்லூரிகளில் மாணவிகள் விண்ணப்ப எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது.

Similar News

News September 16, 2025

கவின் கொலை வழக்கு; எஸ்ஐ ஜாமின் மனு இன்று விசாரணை

image

தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மின் பொறியாளர் கவின் கடந்த ஜூலை மாதம் கேடிசி நகரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் அவரது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்நிலையில் ஜாமின் மனு கோரி உதவி ஆய்வாளர் சரவணன் மனுதாக்கல் செய்திருந்தார். நேற்று மற்றும் இன்று அந்த மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

News September 16, 2025

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நெல்லை காவல்துறை அறிவுரை

image

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஏராளமான மாணவர்கள் ஆட்டோக்களில் பயணம் செய்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆட்டோக்களின் அளவுக்கு மீறி மாணவர்களை ஏற்றி செல்வதாக தொடர்ந்து புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி போக்குவரத்து காவலர்கள் மூலம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். குறிப்பிட்ட அளவிலேயே ஆட்டோகளில் குழந்தைகளை ஏற்றி செல்ல வேண்டும் என அறிவுரை.

News September 16, 2025

நெல்லை: நவதிருப்பதிகளுக்கு ரூ.500 கட்டணத்தில் சிறப்பு பேருந்து

image

நெல்லை அரசு போக்குவரத்துக் கழகம் புரட்டாசி சனிக்கிழமைகளான செப். 20, 27, அக். 4, 11 ஆகிய நாட்களில் நவ திருப்பதி கோயில்களுக்கு சிறப்பு பஸ் சேவை இயக்குகிறது. காலை 6 மணிக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்திலிருந்து புறப்படும். இந்த பஸ்கள் 9 கோயில்களை தரிசித்து இரவு திரும்பும். (கட்டணம் நபருக்கு ரூ.500) முன்பதிவு காலை 8 முதல் இரவு 8 மணி வரை. விவரங்களுக்கு 7904906730, 9994462713 (or) www.tnstc.in காணவும்.

error: Content is protected !!