News May 18, 2024
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் மே 20-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக கல்லூரியில் உள்ள ஐந்து பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பொறுப்பு மணிகண்டன் அறிவித்துள்ளார். விருப்பமுள்ள மாணவ மாணவிகள் உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News July 8, 2025
தகவல் கையேடுகளை வழங்கும் பணிகள் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு திட்டமான, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் (07.07.2025) திங்கள் கிழமை கள்ளக்குறிச்சி நகராட்சி 20வது வார்டு பகுதியில் தொடங்கி வைக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
News July 7, 2025
தகவல் கையேடு வழங்கும் பணிகளை பார்வையிட்ட ஆட்சியர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின்கீழ் கள்ளக்குறிச்சி நகராட்சி, 20வது வார்டு ஏமப்பேர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், இன்று (07.07.2025) தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.
News July 7, 2025
திருமண தடை நீக்கும் பச்சையம்மன்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கொணலவாடி கிராமத்தில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயில், சுற்றுவட்டாரத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆலயமாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு வந்து பச்சையம்மனை வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி, விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். ஷேர் பண்ணுங்க…