News May 11, 2024

அரசு கலைக்கல்லூரியில் மதிப்பீட்டுக் குழுவினர்

image

புதுச்சேரி, தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நேற்று தேசிய தர நிர்ணயம் மற்றும் அங்கீகாரக் குழுவினர் ஆய்வு செய்தனர். கல்லூரியின் பசுமை வனம் ,புத்தர் தோட்டம், வீரமங்கை வேலு நாச்சியார் தோட்டம் முதலான ஆய்வுக்குழுவினர் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து மதிப்பீட்டுக் குழுவினர் மதிப்பீட்டு அறிக்கையைக் கல்லூரி முதல்வரிடம் வழங்கினர். பிற்பகலில் மதிப்பீட்டுக் குழுவினருக்கு விடைதரும்விழா நடந்தது.

Similar News

News July 8, 2025

புதுவை: சீருடை பணியாளர்கள் நிலுவை படி குறித்து அறிவிப்பு

image

புதுச்சேரி அரசு நிதித்துறை செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதுவை அரசின் 7-வது ஊதிய குழுவின் படி சீருடை பணியாளர்களுக்கு, சீருடை உள்ளிட்ட பல்வேறு படிகளை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதுவை காவல்துறை மற்றும் ஊர்காவல் படையினருக்கு 1.7.2017 முதல் 31.3.2021 வரை நிலுவையில் உள்ள சீருடை படி வழங்கப்பட உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

News July 8, 2025

“விரைவில் ஆதார் அடிப்படையில் இலவச அரிசி” – அமைச்சர் தகவல்

image

காரைக்காலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன், “அரசின் இலவச அரிசியானது உரியவர்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டும்.வேறு யாரும் இதனால் ஆதாயம் அடையக் கூடாது என்ற நோக்கில் ஆதார் அடிப்படையில் அரசின் இலவச அரிசியானது வழங்க உத்தேசிக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.

News July 8, 2025

புதுச்சேரி: மணல் லாரி மோதி பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

image

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் ஊசுடு ஏரிபகுதியில் ஸ்ரீ கன்னியம்மன் ஆலயம் அருகில் காலை 8 மணி அளவில் மணல் ஏற்றி வந்த லாரி, அவ்வழியே தந்தையோடு பள்ளிக்கு சென்ற இரண்டு மாணவர்களின் மீது மோதியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இரண்டு மாணவர்களும் உயிரிழந்தனர். இதனால், அந்த மானவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் 3 மணி நேரம் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!