News June 25, 2024
அரசு அலுவலகங்களில் நாளை போதை எதிர்ப்பு உறுதிமொழி

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலர் ஜெய்சங்கர் இன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “நாளை சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகத்திலும் காலை 11 மணிக்கு போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான உறுதிமொழியை எடுக்க வேண்டும். இந்த உறுதிமொழி நிகழ்ச்சியை அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 19, 2025
புதுவை அரசு கல்லூரியில் கேட்வே டூ பிரான்ஸ் 2.0

புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில், பிரெஞ்சு துறை & தர உறுதியளிப்பு குழு சார்பில் ‘கேட்வே டூ பிரான்ஸ் 2.0’ என்ற வழிகாட்டுதல் கருத்தரங்கு நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். பிரெஞ்சு பேராசிரியர் திருவேங்கடம் வரவேற்றார். கேம்பஸ் பிரான்ஸ் நிறுவன மேலாளர் ஸ்ருதி மரியம் ஜோசப், பிரான்சில் உயர்கல்வி வாய்ப்புகள், சர்வதேச மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கினார்.
News September 19, 2025
புதுவை: டீசல் மானியம் அறிவித்த முதல்வர்

புதுவை சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது மீன்வளத்துறையில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட எப்.ஆர்.பி. கட்டுமர உரிமையாளர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட டீசல் நிலையத்தில் டீசல் கொள்முதல் செய்யும் உரிமையாளர்களுக்கு வாட் வரிவிலக்கு அளிக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் கூடுதலாக 3,208 உரிமையாளர்களுக்கு டீசல் மானியமாக லிட்டருக்கு ரூ.12 வழங்கப்பட உள்ளது.
News September 19, 2025
காரைக்கால்: கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

காரைக்கால் மாவட்டத்தில் நகர் பகுதியில் உதவி சப் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் நேற்று முன்தினம் கருணாநிதி புறவழிச்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பொது இடத்தில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றிய கடலுார் மாவட்டம், சிதம்பரம் சிவசக்தி நகரைச் சேர்ந்த நடராஜன் மகன் கார்த்திகேயன், 23; என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.