News May 15, 2024
அரசுப் பேருந்தில் பயங்கர ஆயுதங்கள் கண்டெடுப்பு

சென்னையில் இருந்து நெல்லை சென்ற அரசு விரைவுப் பேருந்தில் துப்பாக்கி மற்றும் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை வண்ணாரப்பேட்டை பணிமனையில் பேருந்தை சுத்தம் செய்யும் போது ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் அளித்த புகாரின் பேரில் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 21, 2025
சென்னை: பியூட்டி பார்லரில் பாலியல் தொழில்!

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அந்த பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் போலீசார் நேற்று சோதனை செய்த போது, இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த சரவணன் (29) என்பவரை கைது செய்தனர். மேலும் 4 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
News November 21, 2025
சென்னை: நாட்டையே உலுக்கிய பவாரியா வழக்கில் இன்று தீர்ப்பு!

2005-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கே.சுதர்சனம். இவரை ஹரியானாவைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். இதனையடுத்து, ஐஜி ஜாங்கிட் தலைமையிலான தனிப்படை பவாரியா கொள்ளை கும்பலை கைது செய்தது. இந்த கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவ.21) தீர்ப்பு வழங்கவுள்ளது.
News November 21, 2025
சென்னை: 10th போதும், உளவுத்துறையில் வேலை!

சென்னை மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <


