News July 18, 2024
அரசுப் பள்ளி மாணவருக்கு ரூ.50,000 பரிசு

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான பேச்சு போட்டியில், திருவாரூர் மாவட்டம், பேரளம் அரசு பள்ளி மாணவர் பாவேஷ் பிரசன்னா முதலிடம் பிடித்தார். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று (ஜூலை.18) முதலிடம் பிடித்த மாணவருக்கு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் ரூ.50,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
Similar News
News September 10, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,10) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 10, 2025
திருவாரூர் பள்ளிகளில் தொடங்கிய காலாண்டு தேர்வு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று காலாண்டு தேர்வு தொடங்கியது. மாநில பள்ளி கல்வித் துறையின் அட்டவணை படி 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்கி 25-ம் தேதி வரையிலும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 15-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.
News September 10, 2025
திருவாரூர்: வங்கி கணக்கில் பணம் காணவில்லையா?

உங்கள் Bank Account-யில் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, <