News March 26, 2025
அரசுப் பள்ளியில் இலவச மடிக்கணினிகள் திருட்டு

செங்கல்பட்டு நகராட்சியில், அறிஞர் அண்ணா அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 53 இலவச மடிக்கணினிகள் திருடு போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிளஸ்-2 தேர்வு எழுதி முடிவிற்காக காத்திருக்கும் மாணவர்களில் சிலர் இந்த மடிக்கணினிகளை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்பாக 12ஆம் வகுப்பு மாணவர்கள் 11 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 16, 2025
தாம்பரம் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

தாம்பரம் அடுத்த சேலையூரைச் சேர்ந்த 8 வயது சிறுமி நேற்று மாலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மதுபோதையில் வந்த நபர் ஒருவர் சிறுமியை மாடிக்கு தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் போதையில் இருந்த நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கேரளாவை சேர்ந்த நிஷாயுதின் (30) என்பது தெரியவந்தது.
News September 16, 2025
செங்கல்பட்டை சேர்ந்தவர் மாநில தலைவராக நியமனம்

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில அணி, பிரிவுகளுக்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மேற்கு தாம்பரம் மண்டலத்தில் உள்ள வழக்கறிஞர் குமரகுரு வழக்கறிஞர் பிரிவின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்கறிஞராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 16, 2025
செங்கல்பட்டு: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில்,<