News October 24, 2024

அரசுக்கு சொந்தமான நிலத்தில் சாமி சிலை அகற்றம்

image

புஞ்சைபுளியம்பட்டி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் ஒரு தரப்பினர் தற்காலிக பந்தல் அமைத்து, சுவாமி சிலையை வைத்து வழிபாடு செய்துள்ளனர். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் மற்றொரு தரப்பிலும் சிலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் மற்றும் அதிகாரிகள் அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த சுவாமி சிலை மற்றும் பந்தல்களை அகற்றினர்.

Similar News

News August 14, 2025

ஈரோடு ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா

image

ஈரோடு: ஆனைக்கல்பாளையம் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் கந்தசாமி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து போலீஸ் துறை சார்பில் அணிவகுப்பும், பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியில் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News August 14, 2025

ஈரோடு அருகே புதுப்பெண் தற்கொலை

image

ஈரோடு: கைகாட்டி வலசு பகுதியைச் சேர்ந்தவர் பூபதிக்கும் (37) அவரது மனைவி வினோதினிக்கும் (34) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று(ஆக.13) வினோதினி தாய்க்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News August 14, 2025

ஈரோட்டில் வங்கி வேலை வேண்டுமா? CLICK NOW

image

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில்(TMB)Probationary Officer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் வருகிற ஆக.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ரூ.72,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. (SHARE NOW)

error: Content is protected !!